தந்தையும் மகளும்/140⁠

விக்கிமூலம் இலிருந்து


140 அப்பா! தண்ணீரைக்கொண்டு நெருப்பு பற்றவைக்க முடியுமா?

அம்மா! நாம் தண்ணீரைக்கொண்டு நெருப்பை அணைக்கிறோமேயன்றி நெருப்பைப் பற்றவைப்பதில்லை. விறகு சிறிது ஈரமாயிருந்தால்கூட அதில் நெருப்புப் பற்ற வைத்த முடிவதில்லை. அப்படியிருக்க நீரைக்கொண்டு நெருப்புப் பற்றவைப்பது எப்படி?

அம்மா! தண்ணீரைவிட நீராவி அதிக உஷ்ணமாயிருக்கும். அதைக் கொண்டுகூட நெருப்புப் பற்றவைக்க முடியாது. ஒரு குச்சியை நீராவியில் பிடித்தால் அது எரியுமா? எரியாது.

ஆனால் அமெரிக்காவில் காட்மாய் என்று ஒரு எரிமலை இருக்கிறது. அதன் அடிவாரத்தை ஒட்டி உள்ள பள்ளத்தாக்கில் குழாய்கள் இறக்கினால் அவற்றில் கீழேயிருந்து சூடான நீராவியும் வேறுபல வாயுக்களும் வெளியே வருகின்றன. அந்த நீராவி கீழேயுள்ள எரிமலைக் குழம்பிலிருந்து வருவதால் இரும்பைச் சிவக்கக் காய்ச்சினால் எவ்வளவு சூடு இருக்குமோ அவ்வளவு சூடு இருக்கும். அதனால் மரச்சீவல்களை அதில் இட்டால் நெருப்புப் பற்றிக்கொள்ளுமாம்.

டாக்டர் கிரிக்ஸ் என்பவர் அந்தப் பிரதேசத்தைக் கவனித்து வருவதற்காகச் சென்றார். அவர் ஒரு கொம்பின் முனையைச் சதைத்து வைத்துக்கொண்டு அந்த முனையை ஒரு குழாயினுள் இட்டார். அது புகைந்து கரியாயிற்று, நெருப்புப் பிடிக்கவில்லை. அதற்குக் காரணம் அங்கு பிராணவாயு இல்லாததே. அதனால் அவர் கொம்பை வெளியே எடுத்ததும் அது சுடர்விட்டு எரியத் தொடங்கிற்று. ஆனால் நெருப்புப் பற்றும்படி செய்தது நீராவிதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/140⁠&oldid=1538366" இலிருந்து மீள்விக்கப்பட்டது