தந்தையும் மகளும்/192

விக்கிமூலம் இலிருந்து


192அப்பா! வீட்டுக்குள் சன்னலில் பூத்தொட்டி வைத்தால் அதிலுள்ள செடி சன்னலுக்கு வெளியே தலையை நீட்டுகிறறே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நம்முடைய உடம்பிலுள்ள உறுப்புக்கள் வேலை செய்வதற்கும் நாம் நடமாடுவதற்கும் நமக்குச் சக்தி வேண்டுமே, அது எப்படிக் கிடைக்கிறது? நாம் உணவை உண்ணுகிறோம் காற்றைச் சுவாசிக்கிறோம். உணவிலுள்ள மாப் பொருளானது காற்றிலுள்ள பிராண வாயுவுடன் சேர்ந்து எரிந்து நமக்குச் சக்தியை அளிக்கிறது.

செடியின் உறுப்புகளுக்கும் வேலை செய்ய வேண்டுமே, அதற்கு வேண்டிய சக்தி எப்படிக் கிடைக்கிறது? அதிலும் பொருள் இருந்தால் தான் சக்தி உண்டாகும். அந்தப் பொருளை உண்டாக்கக் கூடிய ஆற்றல் இலைகளுக்கு இருக்கிறது அவை காற்றிலுள்ள கரியமிலவாயுவை கிரகித்து வேர் மூலம் வரும் நீருடன் சேர்த்து மாப்பொருளை உண்டாக்கும். ஆனால் இந்தக் காரியமானது சூரிய வெளிச்சமிருந்தால் தான் நடை பெறும்.

அம்மா! இலைகளின் மீது சூரிய, வெளிச்சம் பட்டால் தான் இலைகள் பச்சையாயிருக்கும், அவைகளில் பச்சை நிறமான குளோரோபில் என்னும் பொருள் உண்டாவதே பச்சை நிறத்துக்குக் காரணம். அந்தப் பச்சை நிறப் பொருள் உண்டானால் தான் இலைகள் மரப்பொருளை உண்டாக்க முடியும்.

அதனால் தான் வீட்டுக்குள் வெயில் வராததால் செடியானது வெயிலை நாடி சன்னலுக்கு வெளியே தலை நீட்ட ஆரம்பிக்கிறது.

ஆனால் அதற்கு எம்படித் தன் உடலை வளைக்க முடியும் என்று கேட்பாய், அம்மா! செடிகள் உயிர் வாழ்வதற்காக அவைகளிடம் சில ரசாயனப் பொருள்கள் காணப்படுகின்றன. அவற்றை "ஆக்ஸின்" என்று கூறுவார்கள். அவை செடியின் சகல பாகங்களில் பரவி நிற்கும். அப்படிப் பரவி நிற்பதால் தான் சாதாரணமாகச் செடியானது வளையாமல் நிமிர்ந்து நிற்கிறது.

ஆனால் நாம் செடியை வெயில் படாத சன்னல் மீது வைத்ததும் ஆக்ஸின்கள் அறையின் பக்கமாகவுள்ள செடியின் பாகத்தில் வந்து சேர்ந்து அந்தப் பாகத்தை மட்டும் விரைவாக வளரும்படிச் செய்கிறது. அதனால் செடியானது வெயிலுள்ள வெளிப் பக்கமாக வளைந்து விடுகிறது.

அம்மா! இதையெல்லாம் அறிய அற்புதமாயிருக்கிறது அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/192&oldid=1538660" இலிருந்து மீள்விக்கப்பட்டது