105
ஒழுங்காக பிரமாணத்தோடு கோஷமிட்டனர்; கூச்சலின் இடியோசை இயந்திர கதியில் இயங்கி லுைம், வரவர பெரிதாகிக்கொண்டிருந்தது. ஒருவர் பின் ஒருவராக, எதிரிகள் குற்றவாளிகளென நிரூ பிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். உயர் அதிகாரியைக் கடப்பாறையால் குத்தித் தாக்கிச் சாய்த்த குற்றவாளியும் கொண்டுவரப்பட்டான்; அப்போது எழுந்த கூச்சல் காது செவிடுபடும்படி செய்தது; கால் தப்படிகள் துரிதம் பெற்றன.
டெங்பிங்கின் குரல் உலோகத் தொனி பெற்று, படிப்படியாக உச்சத்தை அடைந்து, இயந்திரத் துப்பாக்கியைப் போன்று தீயைக் கக்கியது.
கிழவியின் முறை வந்தது; கிராம மக்களுக்கு ஒரு நல்ல படிப்பினையை கற்றுக்கொடுக்க நினைத் தான். -
ஏற்கெனவே ஒன்றரை மணி நேரம் கழிந்து விட்டது. - -
'பொதுத் தான்யத்தை நீ களவாடியதை ஒத்துக்கொள்கிருயல்லவா?” - -
"கட்சியின் பொதுவுடைமைப் புனர் நிர்மாண திட்டத்துக்கு நீ இடையூறு விளைவித்துக்கொண் டிருக்கிருய் என்பதை நீ அறிவாயா?"
பதில் இல்லை. "தானியங்கள் பொதுமக்களுக்குச் சொந்த மானது என்பதையும் பொதுமக்களுக்குரிய தான்யங் களைத் திருடியதன் மூலம் நீ பொதுமக்களின் விரோதி என்பதையும் நீ உணர்கிருயா?”