108
தான். மேற்கொண்டு செல்ல முடியவில்லை; அவள் கல்குவியலில் சாய்ந்துவிட்டாள்.
இந்தத் தடையினல் வெகுண்ட டெங்பிங் அங்கு நடந்து போனன். "இந்தப் பையனை அப்புறப்படுத்துங்கள். அவனை வடக்கு பிரதேசத்திற்கு மற்றவர்களுடன் அனுப் புங்கள்!” தன்னிச்சையற்ற முணுமுணுப்புக்கள் அதிகரித் தன! மக்களின் அத்தகைய தன்னிச்சையற்ற முணுமுணுப்புக்களை யாரும் கட்டுப்படுத்தமுடியாது பயம் வெறுப்பாகவும், வெறுப்பு கோபமாகவும் மாறியது. X “ஒரு பையனை நீங்கள் அவ்வாறு செய்யலா காது!" என்று யாரோ ஒருவன் டெங்பிங்கிடம் சொன்னன். "ஓஹோ நான் அப்படிச் செய்யக்கூடாதோ?” அதிகாரியிடம் ஓர் உயரமான ஆள் வந்து நியா யத்தை எடுத்துப் பேசினன். 'அன்புகொண்ட ஐயா, நான் கெஞ்சிக்கேட்டுக் கேட்டுக்கொள்கிறேன். அவனை விட்டுவிடுங்கள். பையன்மீது கருணைகாட்டுங்கள். அவனுக்கு ஒன்றும் தெரியாது!" - “É urtř?” "சாங்ஃபூ! கிழவி என் அம்மா. பையன் என் மகன். அவனை விட்டுவிடுங்கள். மன்ருடிக் கெஞ்சு கிறேன். அவனுக்குப் பதிலாக என்ன வேண்டு மாளுல் வடக்கே அனுப்புங்கள்!”