195
எனக்கு வேதனையாக இருக்கிறது. அவன் கைது செய்யப்பட்டிருக்கிருன்.”
"ஐயோ!"...என்று அதிர்ந்தாள் லெய்வா. அவள் நெஞ்சம் பிளந்துவிட்டமாதிரியாக உணர லானள். - -
"நாம் என்ன செய்ய முடியும்?” என்று கேட் டாள் அவள், நாம் போகும்போது நம்மோடு அவனையும் அழைத்துப் போகலாமா என்று உங்க ளிடம் கேட்க இருந்தேன். அவன் என் இதயத்தில் வளர்கிருன்.”
'உனக்கு அவ்வளவு பிரியமா அவனிடம்?" 'அவன் ஒரு புத்திசாலியான பையன். அவன் பெற்ருேர்கள் சாகடிக்கப்பட்டது முதல் அவன்மீது நான் அனுதாபம் கொண்டுவிட்டேன்; காரணம், நானும் ஓர் அனதையாக இருந்ததுதான். இப் போது, எனக்கு வயதாகிவிட்டதாலோ, அல்லது எனக்கு மகன் இல்லை என்பதாலோ அல்லது என்னுள் இணைந்துவிட்ட ஓர் அங்கமாக அவனை நான் கருதிய தாலோ அவனை நான் உண்மையாக விரும்புகிறேன்; அன்பு பாராட்டுகிறேன். அவன் கதி என்ன ஆகும்?" அவ ன் மஞ்சூரியாவுக்கு அனுப்பப்பட்டு விடுவான் என்று தோன்றுகிறது. கலகத் தலைவர் களில் ஒருவகை அவனை படைக் காவலன் ஒருவன் அடையாளம் கண்டுகொண்டான்'
"அது சரி; அவனுக்கு நாம் ஏதாவது வழி செய் தாக வேண்டும்!” என்று சொல்லி சிந்தனையிலாழ்ந் தாள் லெய்வா. பிறகு சொன்னள்: "அன்பு இன்ன
தென்றே அறியாதவன் அவன்; ஏனென்ருல், அந்த