பக்கம்:கள்வர் தலைவன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கள்வர் தலைவன்

[அங்கம்-1

இ.ஒரு ஆடு !
வ.பந்தியம் கட்டரையா ?
இ.உம். என்ன பந்தியம் ?
வ.ஒருஆடு நான் திண்ணாப்போனா இன்னொரு ஆடு துண்ணச் சொல்ரது.
கோ.கெட்டிக்காரன்தான் வா, நேரமாச்சி அதுக்குத்தானே உனக்கு வவுத்தான் இண்ணுபேரு வைச்சாங்கள். [கள்வ ரெல்லாம் போகின்றார்கள் சந்தோஷமாய்]
ஜெ.அரசே, இனி சொல்லலாமே தாங்கள்.
ஏ.அப்பா ! நீ என்னுயிரைக் காப்பாற்றிய பரமபுருஷன். என்னுயிர் உன்னுடைமையாய்விட்டது. இனி நீ கேட்பதை நான் மறுப்பேனோ? ஆயினும் இக்கள்வர் கூட்டத்திலிருந்தும், உன்னைப்பார்த்தால் ஈவு இரக்கமுள்ளவனாகத் தோற்றப்படுகின்றாய். என்னுடைய விருத்தாந்தத்தைக் கேட்பாயாயின் வீணாக வருத்தப்படுவாய், நான் ஏன் கூறவேண்டும்?
ஜெ.அப்படியல்ல, சொல்லும் கேட்போம்.
ஏ.நான், புஷ்பபுரத்தரசனாகிய சச்சந்தனுடைய மூத்தகுமாரன், என்பெயர் ஏமாங்கதன். என் தாயார் என்னைப் பெற்றவுடன் இறந்து விட்டார்கள். பிறகு என்பிதா வேறொருமணம் செய்துகொண்டார். அனுசூயா தேவியாகிய அம்மாற்றாந்தாய் மூலமாக எனக்கு செளரிய குமாரன் சுசங்கதை என்று ஒரு தம்பியும் தங்கையு முண்டு. அனுசூயாதேவி என்னிடம் மிகவும் அன்பு பாராட்டி வந்தாள். செளரியகுமாரனும் சுசங்கதையும் என்னைத் தம்முடைய சொந்த தமையனைப் போலவே பாவித்து வந்தார்கள்.
ஜெ.உம்முடைய தம்பியின் பெயரென்ன ?
ஏ.செளரிய குமாரன். சுவாமியினுடைய கிருபையால் நான் எல்லா செளக்கியங்களையும் பெற்று விவாகமாகி புத்திர சந்தானத்துடன் வாழ்ந்து வந்தேன்.
ஜெ.செளரிய குமாரனுடைய நண்பன் ஜெயபாலன் என்றொருவன் இருந்தானே உமக்குத் தெரியுமா ?
ஏ.தெரியும், அவர்களிருவரும் உயிர் நண்பர்களாயிருந்தார்கள். ஆனால் நான் ஜெயபாலனைப் பார்த்ததில்லை. அவன் இரண்டு வருடங்களுக்கு முன்பே இறந்ததாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/10&oldid=1555784" இலிருந்து மீள்விக்கப்பட்டது