பக்கம்:கள்வர் தலைவன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சி-4]

கள்வர் தலைவன்

5

அருகிற் சென்று கண்டறிவோம் ! [அருகிற் செல்கிறான்.] என்ன, கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றான் இறந்துவிட்டானு என்ன பயத்தினால் ? இல்லை மெய்ம்மறந்தான் போலும்! இவனை நாம் எங்கேயோ பார்த்த ஞாபகமா யிருக்கின்றது ?-ஓ ! இவர் செளரிய குமாரனுடைய அண்ணனன்றோ? ஆம் ஆம்! இவர் மாறுவேடம் பூண்டு இங்குவந்து நமது கள்வரிடம் அகப்படும்படி நேரிடுவானேன் -ஓ! அப்படியேதாவது நேரிட்டிருக்கலாம்! நாம் இவரை இறக்க விடுவது நியாயமன்று. இவ்விசேஷத்தினுண்மையை அறியவேண்டும். [ஏமாங்கதன் முதுகை மெல்லத் தொடுகின்றான்] ஏ.ஓ! காலம் வந்து விட்டது! அப்பா! உங்களை நான் மிகவும் வேண்டிக்கொள்ளுகின்றேன், என்னை ஹிம்சியாது ஒரே வெட்டாய் வெட்டி விடுங்கள்.

ஜெ. ஐயோ பாவம் ! நான் தம்மைக் கொல்ல வந்திருக்கின்ற தாக எண்ணிக் கூறுகின்றார்-ஏமாங்கதராஜனே! நான் உம்மைக் கொல்லவரவில்லை கண்விழித்துப் பாரும்.

ஏ.[பயந்து கண்விழித்து]அப்பா ! நீ யார் ? நான் ஏமாங்கதனென்று உனக்கெப்படி தெரியும்?

ஜெ. சொல்லுகிறேன். இதே [ஏமாங்கதனைக்கட்டியிருக்கும் கயிற்றை யறுத்து, ஸ்தம்பத்தினின்றும் விடுவிக்க, ஏமசிங்கதன் மூர்ச்சையாகின்றான்]பரவும் மூர்ச்சையாயினான்! [சயித்தியோபசாரம் செய்கின்றான்.]

ஏ.[கண்விழித்து]நான் என்ன கனவு காண்கின்றேனோ!

ஜெ.இல்லை இல்லை.

ஏ.அப்பா ! நியா ராயிருந்தாலுமிருக்கட்டும். நாம் இவ்விடத்தை விட்டு சீக்கிரம் அப்புறம் போவோம். நான் இங்கிருப்பேனாயின் என்னைக் கொன்று விடுவார்கள்! சீக்கிரம் எழுந்திரு ! ஐயோ! எழுந்திருக்கவும் எனக்குச் சக்தியில்லையே! [ஜெயபாலன் மடிமீது விழுகின்றான்.]

ஜெ.ராஜகுமாரா எழுந்திருக்கவேண்டாம். ஒன்றும் பயப்படாதீர். நான் உம்மைக் காப்பாற்றுகின்றேன். தாம் ஏது இங்கு இவ்வுடையுடன் வந்தது? கடந்த விருத்தாந்தத்தை உண்மையாக ஒளியாது கூறும்.-- என்னிடம் கூறச் சந்தேகப்படுகின்றாற் போலிருக்கிறது. ஒரு சங்தேகமும் வேண்டாம். நீர் ஒன்றும் பயப்படவேண்டியதில்லை, என்ன சமாசாரம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/7&oldid=1555710" இலிருந்து மீள்விக்கப்பட்டது