3 18 கு று க் .ெ த ைகக்
தளிர் போன்ற அவளது மேனி பசுமை படர்ந்து மெலிந்தது. இவற்றால் தான் அவளது துயரைப் பிறர் அறிதல் முடிந்தது. எனவே அவள் உன்னைக் கோபித்து விரட்டமாட்டாள். தைரிய மாகச் செல். அவளுடன் சேர்ந்து வாழ்’ என்றாள்.
யாய் ஆகியளே ! மாயோளே! மடை மாண் செப்பில் தமிய வைகிய பெய்யாப் பூவின் மெய் சாயினளே! பாசடை நிவந்த கணக்கால் நெய்தல் இன மீன் இரும் கழி ஒதம் மல்குதொறும் கய மூழ்கு மகளிர் கண்ணின் மானும் தண்ணங் துறைவன் கொடுமை கம் முன் நாணி, கரப்பு ஆடும். o -கயமஞா
338. நீயே காதலன் ! நானே காதலி
‘அன்பே ‘ என்றான்.
‘ஆருயிரே !’ என்றாள்.
‘இன்பமே” என்றான்.
“ஏன் ?’ என்றாள்.
என் மேல் கோபமா ?”
எதற்கு ?’’
“உன்னை மறந்து அந்த ஆடல் மகளுடன் ஆனந்தமாயிருக் தேனே அதற்கு” a
‘என் மீது வற்றாத அன்பு கொண்டு வந்தாயே, அதுவே போதும் கண்ணு”
“நீயே என் நெஞ்சுக்குகந்த காதலி’
- நீயே என் காதலன்’
‘இம்மை மறுமை இரு பிறவியிலும் இப்படியே ஆகுக!”
‘அணிலின் பல் போன்ற முள்ளேயுடைய கழி முள்ளிச் செடி யும், நீலமணி போன்ற நீரையும் கொண்ட கடல் நாடனே, மறு பிறவியிலும் இப்படியே ஆகுக’. என் காதலனுகுக. நானே உன் மனமுவந்த மனேவியாகுக.”