பக்கம்:தமிழர் மதம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலை யியல் திங்களைப் போல் தீயும் இரவில் ஒளி தருவதால், கதிரவன் திங்கள் தீ ஆகிய மூன்றும் முச்சுடர் எனப்பட்டன. "அந்திச் சேயொளி முச்சுடர் முக்கணும் (தக்க யாகப்.உஅக). உஎ பண்டைத் த மி ழ க முப் புலங்களுள், தென்புல மென்னும் பாண்டிநாடு வெப்பமிக் கிருந்ததனால், பாண்டியன் திங்களைத் தன் குல முதலாகவும்; குணபுல மென்னும் சோழநாடு பனிமலை வரை தொடர்ந்து வெப்பங் குன்றியிருந்ததனால், சோழன் கீழ்த்திசையி லெழுங் கதிரவனைத் தன் குல முதலாகவும்; குட புல மென்னும் சேரநாடு நாள்தோறும் பெருமழை பொழியும் குடமலைத் தொடரைக் கொண்டிருந்ததனால், சேரன் தீயைத் தன் குல முதலாகவும்; கொண்டிருந்தனர். மூவேந்தர் குடிக் கிளைகளே, வட நாவலம் ஆசிய நாடாக மாறியபின், 'ச ந்திர வமிசம்' 'சூரிய வமிசம்' ‘அ க் கி னி வமிசம்' எனப் பெயர் பெற்றன. நல் விலங்கு வடார்க்காட்டு மாவட்ட ஆம்பூரின் பழம்பெயர் ‘ஆன்மையூர்’ என்றும், ஆவை வணங்கி வந்ததால் அப்பெயர் பெற்றதென்றும், அங்கிருந்த பெரும்புலவரும் பாவேந்தருமான துரைசாமிப் பாவலர் சொன்னார். இங்ஙனம் வேறு சிலவூரிலும் ஆவை வணங்கி யிருக்கலாம். நச்சுயிரி தமிழகத்தில் மக்களைத் தொன்று தொட்டுக் கொன்று வந்த நச்சுயிரிகளுள், தலைமையானது பாம்பு. பாம்பினத்தில், தீயதும் தீய தல்லாததும் ஆக இரு சாருள. தீயவற்றுள்ளும், நச்சுப் பல்லாற் கொத்தி மேனி நோயுண்டாக்குவனவும் விரைந்து உயிர் போக்குவனவுமான சிற்றுடம்பினவும், வாயினாற் பற்றி மக்களை யும் விலங்குகளையும் இரையாக விழுங்கும் பேருடம்பினவும், ஆக இரண்டு வகுப்புக்க ளுள. கொல்வது மட்டும் செய்வன வற்றுள், நல்ல பாம்பு, விரியன் முதலிய பலவகை யுள. அவற் றுள்ளும், ஒவ்வொன்றும் பல திறப்பட்டதாகும். பாம்பு என்பது, முதற்கண் நல்ல பாம்பின் பெயராகவே யிருந்து, பின்னர்ப் பொதுப் பெயராயிற்று. பாதல் பரவுதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/43&oldid=1428896" இலிருந்து மீள்விக்கப்பட்டது