பக்கம்:தமிழர் மதம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஅ தமிழர் மதம் பா- பாவு. பா -பாம்-பாம்பு. நல்ல பாம்பு தன் படத்தைப் பரப்புவதால் பாம்பு எனப்பட்டது. அது பொதுப் பெயரானபின், குல மரத்தை "நன் மரம்” என்றாற் போலக் குலப் பாம்பை நல்ல பாம்பு என்றனர். நாகம் என்பதே பாம்பின் பொதுப் பெயர். நகர்வது நாகம். ஒ.நோ: OE. Snakan - to creop; Snak-Snako. நாகம் - வ. நாக (naga). நக (naga) என்னும் சொல்லி னின்று திரித்து, மலையிலிருப்பது நாகம் என்று வடமொழியாளர் கூறுவது, பொருந்தப் பொய்த்தல் என்னும் உத்தி, நச்சுப் பாம்புகளுட் பெருவழக்காக மக்களில்லங்களை யடுத்து வாழ்வது, நல்ல பாம்பே யாதலால், நாளடைவில் நாகம் என்னும் பொதுப் பெயர் நல்ல பாம்பின் சிறப்புப் பெயருமாயிற்று. நாகப் பாம்பு பைத்தனையு (சீவக. ருசுக). "நன்மணி யிழந்த நாகம் போன்று” (மணி.உரு : ககூரு): முடிநாகராயர், இளநாகனார், நன்னாகனார், நாகனார், நாகன் தேவனார் என்னும் பண்டைப் புலவர் பெயர்களும், நாலை கிழவன் நாகன் என்னும் கடைக் கழக வேள் பெயரும், நாகப்பன் நாகராசன் நாகலிங்கம் நாகம்மை நாகமுத்து என்னும் இற்றை இயற்பெயர்களும்,நாகபடம் (பாம்படம்) நாக முடிச்சு நாகர் நாகவொத்து என்னும் பெண்டிர் அணிப் பெயர் களும், குறிப்பாகவும்; சில அரச மரத்தடியிலும் மேடைமேலு முள்ள, ஐந்தலை நாகமும் எழுதலை நாகமும் இருநாகப் பிணை யலும் ஆகியவற்றின் உருவம் செதுக்கிய கற்கள், வெளிப்படை யாகவும்; பண்டை நாக வணக்கத்தைத் தெரிவிக்கும். நெல்லை மாவட்டத்தில் சங்கர நயினார் கோவிற் பக்கத்தில், பாம்புக் கோவில் சந்தை என்றெரு புகைவண்டி நிலையமும் உள்ளது. இன்றும் நாகக் கற்களை வணங்கும் மாந்தர் ஒரு சிலர் உளர். நல்ல பாம்புப் புற்றே வளையோ உள்ள வீடுகளில், நாள் தோறும் அல்லது செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் பாலும் பழ மும் படைப்பது வழக்கம். வதி தெய்வம். பண்டை மாந்தர், ஒவ்வொரு மலையிலும் சோலையிலும் இயற்கை நீர் நிலையிலும், ஒவ்வொரு தெய்வம் நிலையாக வதிந்த தாகக் கருதி, அவற்றையும் வணங்கி வந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/44&oldid=1428897" இலிருந்து மீள்விக்கப்பட்டது