இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதாவின் தேன்.மழை #24 வந்தோர் ஆண்ட மணித்திரு நாடாம் தொண்டை நாடு சண்டைநா டானது. தாய்மொழிப் பற்றும் தன்மான உணர்ச்சியும் காலை நேரத்து நிழல்போல் குறைந்ததால் சார மற்ற சரித்திரம் வளர்ந்தது. வேற்று நாட்டினர் விழுங்கினர் தமிழரை. தூங்கிய தமிழகம் தோற்றது பிறரிடம். புலிக்கொடி வீழவே எலிக்கொடி பறந்தது! ஆந்திர அரசு வேர்கொண்ட புகழொடு சிறந்து விளங்கிய தேர்வேந்தன் கிருட்டிண தேவன் என்பான் செங்கழுநீர்ப் பட்டெனும் செங்கற் பட்டுக்குப் பக்கத்தில் உள்ள பழம்புக மூராம் - விடையீச் சுரத்தில் iற்றிர சாண்டனன். மரத்தின் கீர்வளர் மரம்போல் ஒருசிலர் அவனுக் கடங்கி ஆட்சி செய்தனர். விரன் காத்தவராயன் காந்தவ ராயன் கட்டிளங் காளை . இமய மலையே எதிர்த்த போதினும் அசைப்பது கடினம் அன்னவன் தோளை! அவனோ, குறுநில மன்னவன் ஏந்துவாள்