உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

† 25 வன்னிய வீரன் வெற்றிகள் பெற்ற விழுப்புண் வீரன் பகைமுகம் கண்டு நகைமுகம் காட்டிய நெருப்பு வன்னியன் நினைப்பில் திண்ணியன் தாழ்ந்துபோய் உள்ளம் தளர்ந்துபோ யிருந்த தமிழரை எல்லாம் தட்டி யெழுப்பிய தலைவன் இரும்பிடத் தலையார் போன்றவன் கிருட்டிண தேவனை விரட்ட முயன்றவன். உரிமைப் போர் வன்னிய வீரனை அந்நியத் தெலுங்கன் அடக்குதற் காகப் படைகளை அனுப்பினான். வந்த படைகளை வன்னியன் வீழ்த்தினான். பின்னரும் ஆந்திரன் பெரும்படை அனுப்பினான். முரட்டுக் குதிரைகள் முன்னே சென்றிட வினைத்தொகை யானைகள் விரைந்து நடந்திட வீர வன்னியன் வெறியோ டெழுந்தனன் அன்னவன் தம்பியும் அவனோ டெழுந்தனன் தடித்த தோளினர் தடக்கை வாளினர் வெடித்த சிரிப்பினர் விழிக்கண் தீயினர் கடித்த வாயினர் கருங்கடற் குரலினர் தடித்த தோளிளைத் தட்டி அதட்டினர்! வேங்கை வன்னிய வீரரும் அதட்டினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/128&oldid=926709" இலிருந்து மீள்விக்கப்பட்டது