உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை '130 பொன்னிற மாலை அந்திப் பொழுதிலே வந்து சேர்ந்தனள் வாடகைப் படகு. வினையின் கதை ஆந்திர வேந்தன் அவளை நோக்கிக் காந்தவ ராயனைத் தீர்த்துக் கட்டி அன்னவன் தலையை என்னிடம் காட்டினால் பலநூறு வராகன் பசும்பொன் பெறலாம் என்று கூறினன் ஏந்திழை ஒப்பினள் விரைவில் வருவதாய் விடைபெற்றுத் திரும்பினள் இயற்கை சிரித்தது கூன்மலர் என்று குறிப்பிடும் பாதிரிப் பூக்களும் மாதவி மரத்தின் பூக்களும் தேனொடு வாயைத் திறந்திடும் காலம். குட்டி யானைகள் கொட்டாவி விடுதல்போல் இன்னிசை மூங்கிலில் எழுந்திடும் காலம். தேர்தேர்ந் தெடுப்பதில் சிறந்தவேள் ஆய்போல் தேன்தேர்ந் தெடுக்கத் தெரிந்த வண்டுகள் காந்தாரம் பாடிக் களித்திடும் காலம். செந்தீப் போன்ற சிறந்தமாந் தளிரைக் குயிலின் கூட்டம் கோதிக் கோதிக் குறடுவாய் திறந்தே கூவிக் கூவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/133&oldid=926714" இலிருந்து மீள்விக்கப்பட்டது