பக்கம்:தேன்மழை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டித்துரைத் தேவர் (1867 - 1911) "ஆயிரத்தெண்ணுற்றறுபத் தேழாம் ஆண்டில் அவதரித்த தேவர் யார்?" "தெரியா தையா" "துயதுதி மஞ்சரி நூல் சைவம் சார்ந்த துதிநூற்கள் தொகைத்திரட்டுப் போன்ற நூற்கள் நாயகியின் தேன்முத்த வண்ணப் பாடல் நாட்டுக்குத் தந்தார்யார்?" தெரியாதையா!" "தீயசெயல் செய்யாத பொன்னு சாமித் தேவரவர் புதல்வர்யார்?" தெரியா தையா!" "அப்பாவி செந்தமிழ்க்குத் தொண்டு செய்த அறிஞரை அறிந்துகொள்ள திருக்கின்றாயே! துப்பாய வானமழை வள்ளல் பாண்டித் துரைத்தேவர் எனுமறிஞர் அவர்தான் தம்பி! இப்போதோர் தமிழ்ச்சங்கம் மதுரை மண்ணில் இருப்பதற்குக் காரணமே அவர்தான் தம்பி! எப்போதும் மறவாதே அவரை நீபோய் - எங்குமுள தமிழர்க்கும் இதனைக் கூறு!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/216&oldid=926797" இலிருந்து மீள்விக்கப்பட்டது