இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பூம்புகார்
கல்லினால் எல்லை காட்டிக்
காதலால் இதயங் காட்டி
வில்லினால் வீரங் காட்டி
வென்றபின் ஈரங் காட்டிச்
சொல்லினால் நீதி காட்டிச்
சோழர்கள் ஆண்டு வந்த
தொல்புகார் நகரம் கீர்த்தி
துரங்காத நகர மாகும்! "
மங்கல மனைகள்; ஆடல்
வளர்கலைக் கூடம்;நல்ல
சங்கநூற் புலமை மிக்கோர்
சந்திக்கும் 'வார்த்தை வீடு'
தங்குதற் காகச் செய்த
தனிமனை பலவற் றோடு
பொங்குசெந் தமிழி ருந்து
புறங்காத்த நகர மாகும்!