இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதாவின் தேன்மழை
34
'துகிர்துகிர்' என்னும் ஓசை
துகில்விலை ஓசை; பூவை
'முகிர்முகர்' என்னும் ஓசை
மொய்த்தவர் ஓசை; நல்ல
'நகர்நகர்' என்றும்; சற்றே
நகர்நகர் என்றும், நீபோய்ப்
'பகர்பகர்' என்றும் ஒசை
பரந்தபொன் னகர மாகும்!
சீரோடு நீண்டு சென்ற
தெருக்களில் தருக்கள்; கோவில்
தேரோடும் வசந்த வீதி
தென்புறம் சமணர் பள்ளி
ஊரோடும் மழைநீ ரோடும்
ஒற்றுமை கொண்ட பொன்னி
நீரோடு நேசங் கொண்ட
நெய்தல்நீர் நகர மாகும் !
பிறைமுக வடிவம் காட்டும்
பெருங்கடல் விரித்த நீரில்
அறிமுகம் கொண்ட கப்பல்
ஆனைபோல் அசைந்தே நின்ற
துறைமுக நகரம்; உப்புச்
சுவைநீரும் பொன்னி யாறும்
மறைமுகம் ஏது மின்றி
மயங்கிய திணையூ ராகும்!