இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
35
பூம்புகார்
மழைகொண்ட கார்கா லத்து
மாமுகி லெனயீந் தோரும்
குழைகொண்டு மனையில் மேய்ந்த
கோழியை விரட்டி னோரும்
பிழைகொண்ட செயல்செய் யாத
பெரியரும்; பாய்ந்த பார்வை
வழிகண்டு காதல் கொண்டு
வாழ்ந்தோரும் வாழ்ந்த மூதூர்!
செங்குத்து மலைகள் போன்று
செந்நெலைக் குவித்தும்; வந்த
வங்கத்துப் பண்டம் பெற்றும்
மணிக்கடல் முத்தை விற்றும்
தங்கத்தை மலர்க ளாக்கித்
தக்கார்க்குப் பரிச ளித்தும்
சங்கத்துச் செய்யுள் செய்த
சான்றோரை ஈன்ற மூதூர்!