இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கழகத்தின் 'இராசராசன் விருதினையுைம்' பெற்றுத்தந்த 'தேன்மழை' என்னும் இந்நூல் எனக்கு பெரும்புகழ் சேர்த்த புத்தகம்.
ஐந்து பதிப்புகளைக்கண்ட இந்நூல் ஆறாவது பதிப்பாக இப்போது வெளியாகிறது.
திருவாசகத்திற்கு சிறந்ததொரு உரையெழுதியும், பாவேந்தர் படைப்புக்களை முழுமையாகத் தொகுத்து வெளியிட்டும் பெரும் புகழ் பெற்ற கவிஞர் ஆ. திருவாசகன் அவர்கள், தனது அருள் சுடர் பதிப்பகத்தின் மூலமாக இதை வெளியிடுவது எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது.
மிகச் சிறப்பான முறையில் புத்தகத்தை வெளியிட்டிருக்கும் அவரை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
கலைஞர் கருணாநிதி நகர்,அன்புடன்
சென்னை - 600 078.சுரதா
25-12-2000.