பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 - நாச்சியப்பன் வளர்ந்திருக்கும் பகையெண்ணம் மாற்று கின்ற வழியாய்ந்து செயல்புரிக! விரைவில் இன்பக் களமாகும் நல்வாழ்வு வந்து சேரும்; கவலைமறைந் தொழியும்.இதில் ஐயம் வேண்டாம். வஞ்சகளும் பொன்னப்பன் நெய்யும் சூழ்ச்சி வலையறுந்து விழவேண்டும்; தங்கள் அன்பு நெஞ்சத்தில் நல்லின்பம் நிலைக்க வேண்டும்; நிகரில்லாப் பண்புடையார் முத்தப் பர்தம் சஞ்சலம்,நீங் கிடல்வேண்டும்; இந்தத் தொண்டே சாதித்து முடிப்பதென உறுதி கொண்டேன்; பஞ்சனைய அடிநோக அலைய வேண்டாம்; பணிபுரிய நானுள்ளேன்; கவலை வேண்டாம்! இப்போதே பயணத்தை மேற்கொள் கின்றேன்; எவ்விடத்தும் முத்தப்பர் தம்மைத் தேடித் தப்பாமல் அழைத்திங்குச் சேர்ப்பேன்; என்று தலைப்பாகை சரிப்படுத்தி அணிந்தெ ழுந்தாள்! ஒப்பாரும் மிக்காரும் இல்லை பெண்ணே உன்மனத்துச் சஞ்சலத்தை உதறி விட்டே இப்பாரில் பிறர்க்குதவ எழுச்சி கொண்டாய்; என்னென்றுன் தொண்டுள்ளம் போற்று வேனே! முல்லைசொல்லி வாய்மூடு முன்னே அங்கே முருகனெனும் ஆடவனேர் உடைவா ளோடே வில்லம்பு போல்விரைந்து புறப்பட் டாளுய் வெளிப் போந்தான்; அரண்மனையை விட்டுச் சென்ருன். தல்ல நல்ல மணப்பொருள்கள் கொண்டு வந்தான்; நாடாளும் மன்னரிடம் விற்க வந்தான்; வல்லமைசேர் மன்னவரைச் சந்திக் காதே வாயில்கடந் தோடுகின் முன் ஏனே ছুrG@P