உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்ல்கள் 3. தாலோ தாலேலோ எண்ணி யெண்ணித் தவமிருந்தே இன்பக் கனவு பலகண்டே வண்ணச் சிலையாய்ப் பெற்றெடுத்த வைர மணியே தாலேலோ உண்ணும் சோறும் உனக்காக உயிரும் வாழ்வும் உனக்காக கண்ணின் மணியே தாலேலோ கட்டிக் கரும்பே தாலேலோ. 'அம்மா அம்மா’ என்றேநல் அமுதக் குரலில் அழைத்துளத்தில் சும்மா சும்மா தேன்பாய்ச்சும் r சுடர்வி ளக்கே தால்ேலோ. இம்மா நிலத்தில் உனக்கானும் இன்பம் ஒன்றே பேரின்பம் என்மா தவமே தாலேலோ இன்ப மணியே தாலேலோ. கண்டு சிரிக்கும் கற்கண்டே கனிவாய் மழில்ச்சொற்கண்டே வண்டு விழியே பூச்செண்ட்ே . வண்ணத் தமிழே தாலேலோ எண்ணம் இனிக்கப் பிறந்தாய்நீ --- - - ஏற்றம் சேர்க்கப் பிறந்த்ாய்நீ கண்ணே தாலோ தாலேலோ கணியே தாலோ தாலேலோ.