உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 நாச்சியப்பன் 4. சிரித்துக் கொட்டு சப்பாணி செந்தா மரைபோல் முகமலரச் சிரிக்கும் அழகே ஒவியமே நந்தா விளக்கே வாழ்வினிலே நாளும் ஒளிரும் திருச்சுடரே செந்தா மரைப்பூக் கையிரண்டும் சேர்த்துக் கொட்டு சப்பாணி திருவாய் மலர்ந்து பூரித்துச் சிரித்துக் கொட்டு சப்பாணி. நெஞ்சில் இன்ப ஒளிசேர்க்கும் நித்தில மேஎன் செந்தேனே கொஞ்சிப் பேசப் பிறந்திருக்கும் கோலப் பச்சைப் பசுங்கிளியே பஞ்சு போன்ற கையிரண்டும் பழுக்கக் கொட்டு சப்பாணி பணிவாய் மலர்ந்து சிரிப்பள்ளிப் பாய்ச்சிக் கொட்டு சப்பாணி. வெல்லப் பாகே புன்சிரிப்பை விரித்து நெஞ்சைக் கொள்ளைகொளும் செல்லக் கிளியே பசும்பொன்னே சித்திரப் பூவே திருவிளக்கே செல்லப் பிஞ்சுக் கையிரண்டும் சேர்த்துக் கொட்டு சப்பாணி திருவாய் மலர்ந்து பூரித்துச் சிரித்துக் கொட்டு சப்பாணி