உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 9. அழகோவியமே நீராடு கோட்டுப் பூக்கள் மிதந்துவரக் குதித்துப் பாயும் அலையோடே ஒட்டம் போடும் ஆற்றினிலே ஒருக ரையில் போயிறங்கிக் கூட்டுப் பெண்கள் சூழ்ந்திருக்கக் குடைந்து குடைந்து புதுப்புனலில் ஆட்டம் போட்டு விளையாடி அழகோ வியமே நீராடு. மேலை மலையில் ஊற்றெடுத்து மெல்லச் சோலே பல புகுந்து கோல வயல்கள் வழிபெருகிக் குணவாய்க் கடலிற் போய்க்கலக்கும் சேலும் கயலும் பாய்ந்தோடிச் சேற்றைக் குழப்பும் ஆற்றினிலே மேலும் குடைந்து குடைந்தாடு மெல்லிய லன்பே நீராடு. அன்புத் தோழி முகத்தின்மேல் அள்ளி நீரைத் தெளித்தவளும் தன்பங் குக்குத் தெளித்திடுமுன் தலையை நீரின் உள்ளிழுத்துப் பின்பு வெளிப்பட் டெதிர்நின்று பெரிதும் குறும்பாய்ச் சிரித்தபடி அன்பு மகளே நீராடு அழகின் செல்வி நீராடு.