உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடில்கிள் 235 11. சிதைக்கவேண்டாம் என்செல்வா தெருவின் மணலைக் குவித்தொருபால் சின்னச் சின்ன வீடுகளை உருவாக் கித்தாம் விளையாடி உள்ளங் களிப்பார் சிறுமியர்ே. அருமைக் கண்ணே மணல்வீட்டை அழகு சிட்டுக் கால்ாலே உருக்கு லைக்கச் செல்லாதே உதைத்துச் சிதைக்கச் செல்லாதே குவித்த மணலால் சுவரெழுப்பிக் குழிகள் தோண்டி அறையலவும் வகுத்து மணலைக் குறைத்தொருபால் வாசல் வைத்து மகிழ்ந்திடுவார் சிரித்துக் கொண்டே மணல்வீட்டைச் சிதைத்து விட்டால் அப்பெண்கள் வருத்தங் கொள்வார் என்செல்வா வாராய் அங்கே செல்லாதே. கட்டிக் கட்டி உருவாக்கக் காலம் அதிகம் வேண்டுமடா எட்டி உதைக்க ஒருநொடியே இருந்தால் போதும் போதுமடா. சுட்டித் தனத்தை விட்டென்றன் சொல்லைக் கேள்ர்ய் என்செல்வா சிட்டுக் காலால் மணல்வீட்டைச் சிதைக்க வேண்டாம் என்செல்வா.