பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நாச்சியப்பன் மறுக்காமல் சொல்வீர் மனவிருப்பம் தன்னை நறுக்காமல் சொல்வீரே நல்ல முடிவுரைப்பீர் என்றுருகிக் கேட்டாள்; இளைஞன் மனங்கசிந்தான் என்ருலும் சொல்லுகின்ருன் என்றன் அமுதவல்லிப் பெண்ணே உனதருமைப் பெற்ருேருங் காணுமல் எண்ணம் பதைத்திடுவார் எங்கெங்கும் தேடிடுவார் கண்ணுக்குக் கண்ணுய் வளர்த்தவர்கள் பூத்திருக்கும் வண்ண மலரை வடிவழகி யுன்னத்தாம் சற்றுப் பிரிந்தாலும் சஞ்சலமே கொண்டிடுவார் சுற்றத்தார் பக்கத்தார் சூழ்ந்து பழித்திடுவார் நெஞ்சு கலந்துவிட்டோம் நேரிழையே என்ருலும் துஞ்சு மணமாலை சூடுவதன் முன்னலே ஆசைகளைக் கொஞ்சம் அடக்கி யிருப்பாயே மாசற்ருள் என்றபெயர் மாரு திருப்பாயே என்று மணியன் இறைஞ்சினன்; அப்பெண்ணுே நின்ருள் விழியிரண்டும் நீர்சொரியத் தாமரைதான் கூம்பிக் கருத்ததுபோல் கொள்ளை யழகுமுகம் தேம்பி யழுது சிலசொல் லுரைக்கின்ருள். அத்தானே அத்தான்என் ஆசை யடக்குதற்கே எத்தாலும் பேசி எனைத்தடுக்கக் கற்றிரே! அன்பு மனமிருந்தால் ஆசை யடைந்தவளை இன்பப் படுத்தாமல் எத்தனையோ காரணங்கள் சொல்லித் தடுப்பதுண்டோ? சூழ்ச்சியெலாம் நானறிந்தேன் செல்லத் துரையேநீர் சென்றிடலாம் என்றுரைத்தாள்! வெட்டும் விழியூறி வீழுங்கண் ணிரருவி பட்டிதழின் கன்னத்தில் பாய்ந்துவரக் கண்டானே