உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 13 எண்ணங்கள் ஒன்றின; இதயங்கள் வாழ்த்தின! இப்பொழுதே கண்டுவிடஎண்ணுகிறேன் சொல்லுமென்ருர். தப்பேது மில்லையே தங்கள் கருத்திலே ஒப்புகின்றேன் ஒப்புகின்றேன் உண்மை நலஞ்சேர்க்கும் இப்பொன் மொழிக்கோர் எதிர்ப்புண்டோ என்று மலையப்பர் கூறி மனந்திறந்து விட்டார்; தலைக்கொன்ருய் மாலை தருகவெனக் காவலர்க்கோர் ஆனபிறப் பித்தார் அதிகாரி! மங்கை நாணித் தலைகுனிய நம்பி மணியனவன் வாழைமர மின்றி வளர்க்கும் நெருப்பின்றி மேள முழக்கின்றி வேத மொழியின்றி நெஞ்சில் நிறைந்திருக்கும் நீங்காத காதலொன்றே எஞ்சி யிருக்க எழுந்தம் மலர்க்கொடிக்கே பூமாலை சூட்டிநின்ருன்; புன்முறுவல் காட்டிநின்ருன்! தேன்மாலை யன்னேன் திருமார்பில் சூட்டிவிட்டுப் பின்னும் தலைகுனிந்தாள் பெண்ணுள் அமுதவல்லி. மின்னுமவள் கண்ணில் மிதந்துவரும் இன்பவொளி; அன்பு மணியன் அரும்புமொரு புன்னகையால் தன்பால் எழுந்த தனியின்பம் காட்டுனிலை. கண்டு களித்திருந்தார் காவல் அதிகாரி. வண்டு விழிமானும் வாடாத தாமரைச்செங் கண்ணேனும் அன்னரைக் கண்டு வணங்கிவரப் பெண்ணுேடும் மாப்பிள்ளை யோடும் மலையப்பர் நன்றி யுரைத்து நடந்தார்; அதிகாரி நின்றிருந்தார்; வாழ்த்துரைக்கும் நெஞ்சு!