உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

سمميم تجت تلك اسسه ‘புதுவை கலைமகள்', தேசோபகாரி தேசபக்தன்', 'ஆனந்த போதினி சுதேசமித்திரன்’ இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதுதல். - 1924-சோவியத்து நாட்டு மாவீரர் இலெனின் இழப் பிற்குப் பாடல். 1926-சிரி மயிலம் சுப்ரமணியர் துதியமுது-நூலில் சிந் துக்குத் தந்தையாதல். 1928-நவம்பர் 8, கோபதி (மன்னர் மன்னன்) பிறப்பு. த ன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ.வெ. இராவுடன் இணைதல். தாமும் தம் குடும்பமும் பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ளல், குடும்பத் திருமணங்களில் தாலியைத்தவிர்த்தல். 1929- "குடி அரசு பகுத்தறிவு ஏடுகளில் பாடல் கட்டுரை, கதை, கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலே முதன் முதல் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புப் பெறல். . 1930-பாரதி புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் பாடிய சிறுவர், சிறுமியர் தேசியப் பாடல், தொண்டர் நடைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு நூல் வடிவில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை ம.நோயேல் வெளியிடல். திசம்பர் 10-இல் புதுவை முரசு' கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல். 1931-புதுவை முரசு (5-1-31) ஏட்டில் செவ்வாய் உலக யாத்திரை-கட்டுரை வரைதல். சுயமரியாதைச் சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலைக் கிண்டற்காரன் என்ற பெயரில் வெளியிடல் (குத்துாசி குருசாமிக்கு இந்நூல் படைப்பு). 18-8-31 இரண்டாம் மகள் வசந்தா (வேனில்) பிறப்பு பள்ளி ஆண்டு விழாவில் சிந்தாமணி’ எ ன் ற முத்தமிழ் நாடகம் எழுதி இயக்குதல்.