பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 93 — உணர்ந்திடுக தமிழ்த்தாய்க்கு வருந்தீமை உனக்கு வரும் தீமை அன்ருே? பிணிநீக்க எழுந்திருநீ இளந்தமிழா, வரிப்புலியே, பிற்றை நாளுக் கணிசெய்யும் இலக்கியம்செய்! அறத்தைச்செய்' அழகு நாட்டில்! (விடுதலைகொள் பணிசெய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறை பழநாட் டானே! (தோறும் எதுசெய்ய நாட்டுக்கே எனத்துடித்த சிங்கமே! இன்றே இன்னே புதுநாளை உண்டாக்கித் தமிழ்காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்கே! அதிர்ந்தெழுக! தமிழுக்குத் துறைதோறும் துறை அழகு காப்பாய் (தோறும் இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே! புரட்சிப் பாவலர் புகட்டிய மறப்பால் குறட்டை விட்ட தமிழரின் குரலையும் வறண்ட நெஞ்சையும் நனைத்ததும் தமிழர் அரண்டு விழித்தனர்; ஆர்த்தெழுந் துருமினர்! மறந்த தமிழ்நலம் பேணத் தொடங்கினர்! இறந்த பழம்புகழ் தமிழ்மேல் ஏற்றினர்! ஆரியப் பகையின் அடிவயிறு கலக்கினர்! ஏறிய அவர்திறம். இறக்கிக் காட்டினர்: விழித்த தமிழ்ரின் வீறுற்ற் செவிகளில் மொழித்திறம் மிக்க பாவலர் மொழிந்தார்; குறியுற்ற மறவர்களே இப்பணியை முடிப்பதற்கோர் கூட்டம் வ்ேண்டும்!” . . . . . . . . ."