பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

سنہ 124 سا۔

     'அருகரு கிருவர்; மிக்க
      அன்புண்டு, செயலே இல்லை!" 

இரண்டே அடிகளில் முதுமையின் இன்பம் திரண்டு வெளிப்படல் புலமையின் திறமே! அடுத்தது பாவலர் மொழித்திறன்; அதனையும் எடுத்துச் சொல்வேன்; இருந்து கேளுங்கள்: புலவர் ஒருவர் புகன்ற சொற்களின் வளத்தை யறிந்தால் மொழித்திறன் உணரலாம்! பாவேந் தர்க்குப் பழந்தமிழ்ப் பயிற்சியின் ஈவாய் அமைந்தது சொல்திறன்! இதோ!ஒன்று

 "நூலேப்படி-சங்கத்தமிழ் நூலைப்படி-முறைப்படி
  காலையில்படி கடும்பகல்படி! 
  மாலையிரவு பொருள்படும்படி நூலைப்படி சங்கத் தமிழ் . 
                                    நூலைப்படி-முறைப்படி 
  கற்பவை கற்கும்படி-வள்ளுவர் சொன்னபடி. 
  கற்கத்தான் வேண்டுமப்படி! 
  கல்லாதவர் வாழ்வதெப்படி-நூலைப்படி.சங்கத்தமிழ் 
                                    நூலைப்படி'-முறைப்படி 
  அறம்படி-பொருளைப்படி-அப்படியே இன்பம்படி- 
  இறந்ததமிழ் நான்மறை 
  பிறந்ததென்று சொல்லும்படி-நூலைப்படி-சங்கத்தமிழ் 
                                   நூலைப்படி-முறைப்படி 
  தொடங்கையில் வருந்தும்படி-இருப்பினும்

- ஊன்றிப்படி

  அடங்கா இன்பம் மறுபடி 
  ஆகும் என்ற ஆன்ருேர் சொற்படி-நூலைப்படி
                       சங்கத்தமிழ் நூலைப்படி முறைப்படி 
  பொய்யிலே முக்காற்படி-புரட்டிலே காற்படி-
  வையகம் ஏமாறும்படி 
  வைத்துள்ள நூற்களை ஒப்புவதெப்படி? நூலைப்படி -
                        சங்கத்தமிழ் நூலைப்படி-முறைப்படி