3. этний பள்ளி உரத்தநாடு தி.பி. 2006. விடை 17, (31-5-75 அன்று, உரத்தநாடு அரசுயர் பள்ளியில், பாவலரேறு பெருஞ்சித்திரனர் அவர்கள் தலைமையில் திகழ்ந்தது. முன்னுரை : பேரன்பு கொண்டவரே பெரியோரே! தாய்மாரே! பெருமை மிக்கக் காரம்பு மழைபொழியும் கழனிமிகு எழிலுறந்தைக் கவின்மிக் கோரே! நீரம்பொன் நெல்விளேத்துச் சோறுதரும் நெடும்புகழ்சேர் தஞ்சை யோரே! வீரம்பொய் யாத்தடந்தோள் இளைஞர்களே! விறல் தமிழால் வணங்கு வேனே! பாவேந்தன் பெருவிழாவாம்! இவ்விழாவில் பாவலர்யாம் பாட வந்தோம்! . மாவேந்தன் பாட்டிலவன்; மறல்வேந்தன் . புரட்சியிலே! மலர்மி குந்த காவேந்துங் கருங்குயில்போல் தமிழகத்தின் கரையணைந்த புதுவை தன்னில் சாவேந்தும் வரையினிலே செந்தமிழைச் சலிப்பின்றிப் பாடி னனே! இக்காலும் தமிழ்ப்பாடும் புலவருளார்: இரந்துசோ றுண்ண வேண்டித் திக்காலுக் கோரிருசொல் பழந்தமிழில் திருடியொரு பாட்டைச் செய்து முக்காலும் என்பாட்டே நம்புங்கள் . எனப்பொய்யால் முக்கா டிட்டுப் பொக்காயும் பதராயும் தமிழ்வளர்ப்பார்: போலிலனே புதுவை வேந்தன்!