பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 15

கூறினார். சித்தார்த்த குமாரன் தமது முற்பிறப்பிலே பாரம் தர்மங்களைச் செய்திருந்தபடியினாலே அவருக்கு அறிவு விளக்கம் ஏற்பட்டிருந்தது.

விசுவாமித்திரர் வியப்படைந்து, மனதில் கோபங்கொள்ளாமலும் பொறாமைப்படாமலும் மகிழ்ச்சியுடன் இவ்வாறு சொன்னார்: "இவ்வற்புதக் குழந்தை எல்லாக் கல்விகளையும் கல்லாமலே கற்றிருக்கிறது. இக்குழந்தை தெய்வீகக் கல்வியையும் அறிந்திருக்கிறது. இவ்வாறு ஓதாமலே உணர்ந்த இக்குழந்தை என்னிடம் கல்வி கற்க வந்திருப்பது வியப்பாகும்" என்று கூறி வியப்படைந்தார்.

பிறகு விசுவாமித்திரர் மற்றச் சாக்கியச் சிறுவர் ஐந்நூற்றுவருக்கும் கல்வி கற்பித்துவந்தார். சித்தார்த்த குமாரன் ஓதாமலே எல்லாக் கல்வியையும் உணர்ந்து கொண்டார்.

இவ்வாறு நிகழுங் காலத்தில், அரசகுமாரர் பயில வேண்டிய படைக்கலப் பயிற்சிகளையும், போர் முறைகளையும் சித்தார்த்த குமாரனுக்குக் கற்பிக்கச் சுத்தோன அரசர் எண்ணங்கொண்டார். அவர் அமைச்சர்களுடன்கலந்து, வில்வித்தையில் வல்லவர் யார் என்பதை ஆலோசித்தார். அப்போது அமைச்சர்கள் "சுப்ரபுத்தர் என்பவருடைய மகனான சாந்திதேவர் ஆயுதப் பயிற்சியில் வல்லவர். அவரே சித்தார்த்த குமாரனுக்கு ஆசிரியராக இருக்கத் தக்கவர்" என்று கூறினார்கள்.

சுத்தோதன அரசர், சாந்திதேவரை அழைத்துச் சித்தார்த்த குமாரனுக்குப் படைக்கலப் பயிற்சி கற்பிக்குமாறு கேட்டார். சாந்திதேவரும் மனமகிழ்ந்து இசைந்தார்.

சித்தார்த்த குமாரனும் ஐந்நூறு சாக்கியக் - குமாரரும் சாந்திதேவரிடம் படைக்கலப் பயிற்சி பெற ஒப்படைக்கப் பட்டார்கள். பயிற்சி செய்வதற்குரிய பெரியதோர் தோட்டத்திலே இவர்கள் பயிற்சி செய்யத் தொடங்கினார்கள். சாந்தி தேவர், சித்தார்த்த குமாரனுக்கு வில்வித்தை ஆரம்பித்து வைக்கத் தொடங்கினார். அப்போது சித்தார்த்த குமாரன் அவரைப்பார்த்து, "ஆசிரியரே! என்னைப் பொறுத்தவரையில் எனக்கு நானே வித்தைகளை கற்றுக்கொள்கிறேன்" இவர்களுக்கு பயிற்சியைக் கற்பித்துக் கொடுங்கள் என்று வணக்கமாகக் கூறினார்.

சாந்திதேவர் மற்ற எல்லோருக்கும் வில்வித்தை, வாள் வித்தை, வேல்வித்தை, யானையேற்றம், குதிரை ஏற்றம், தேர் ஓட்டம் முதலிய போர்ச் செயலுக்குரிய எல்லா வித்தைகளையும் ஐயம் திரிபு இல்லால்