பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕊穆 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

வரம்பு மீறி சுவிண்டன் பிடிவாதம் காட்டுவதைக் கண்ட சதர்ன் கோர்ட்டார், அவனை எச்சரித்து, வலிய ஒய்வு கொடுத்து லண்டனுக்கு அனுப்பிவிட்டார்கள. அவன் லண்டன் போகும் வழியில் சீதபேதி கண்டு மாண்டான். அவனுக்குப் பதிலாகமேஸ்தர் பணிக்கு வந்த புதியவரான ஹாரிஸ் வேதநாயகருக்கு மீண்டும் வேலையில் சேர உத்தரவு போட்டார். அப்போது வேத நாயகர் பாடிய பாடல் இது.

ஈனத்திலே பிறந்தேன் இறையாய் வரின்,

என்றும் மது பானத்திலே, பரிதான்த்திலே, கை

பழகி, அவ மானத்திலே மிகுந் தோர்க் கதிகாரம்

வழங்கிடுவேன்; ஞானத்திலே சிறந்தோரை எல்லாம் தள்ளி

வை விப்பனே”

-என்று, வேதநாயகர் தனது சொந்த அனுபவத்தைத்தான்் மேற்கண்டவாறு பாடினார்.

(道

இந்தப் பாடல். பாரதியார் பாடிய பாரத நாடு' என்ற பாடலுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது எனலாம்.

வேலையை இழந்து விட்ட வேதநாயகர், வேதனையிலே உழன்றபோது பாடிய பாடல் இது.

"எரிகிற வீட்டிலே பிடுங்குவது லாபம்

என்று சொல்வார் அந்த வண்ணமே பெரிய கோள் சொல்லிநம் உத்தியோகத்தைப்

பிடுங்குவதில் எண்ணமே