பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 | 2. இந்திய இன மொழிப் பண்பாட்டுக் கலப்பு செய்தியின் உண்மை அடிப்படையில் இதுவாகும் (வெவ்வேறு குழுவில் தோன்றிய) பல்வேறுவகைப் பண் பாடுகள் ஒன்றுகூடி ஒரே வாழ்நிலையில் வளர்வதால். பெரிதோ சிறிதோ ஒத்த பொருளாட்சி நிலைமையோடும் பொது வரலாற்றோடும் கூடிய ஒரு சிறப்புவகைப் பண் பாடு ஒரு குறிப்பிட்ட நிலவெல்லைக்குள் தோன்றுகின் றது. இதைச் சுருக்கமாய்ச் சொன்னால், நாட்டினப் பண்பாடுகளின் தொடர்பாலும் முரண்பாட்டாலும் ஒப்பு ரவாதலாலும் எழுகின்றன எனலாம். புதிய வுலகத்தில் இதுவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இனப் பண் பாட்டுக் கலப்பிற்கு மிகப்பெரிய எடுத்துக் காட்டுக்க ளுள் ஒன்று இந்தியாவாற் காட்டப் படுகின்றது. அதன் பெருமைக்கும் முற்றுந் தழுவியற்கும், இற்றை நாளில் அமெரிக்காவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இனப் பண் பாட்டுக் கலப்புக்கூட இணையன்று. இப் புலனத்தைப் பற்றி மீண்டும் ஒருமுறை பேசத் தேவையில்லை நான் முற்கூறியபடி, இதைப்பற்றிய என் கருத்துக்களை வேறோ ரிடத்தில் தெரிவித்திருக்கின்றேன். நமக்குள்ள இந்துப் பண்பாடென்னும் இந்தியாவின் பழமையான பண்பாடு, எண்ணுக்கு மெட்டாத காலத்திலேயே இந்தியாவிற்கு வந்து, அதன் மண்ணிற் பக்கம் பக்கமாய் வாழ்ந்த பல் வேறு மொழி பேசும் பல்வேறு இனத்தாரின் கூட்டு வேலை என்னும் பேருண்மை. இன்று நிலவுகின்றது. இருக்கக்கூடிய வகையில், கோல் இனத்தாரின் முன் னோராகிய நிசாதர் அல்லது ஆத்திரியரே இக்கலவைப் பண்பாட்டின் முற்கூறுகளை அமைத்தவராவார். அவர்க்கு முந்தி வந்தவரும் இந்திய நிலத்தினின்று கறைந்து போனவராகத் தெரிபவருமான நீக்கிரோ வரை