111
நல்ல தென்று மூன்று பேரும் பேசி அப்போ
நாயகி மீனாட்சி யம்மாள் சந்நிதிக்கு வந்து
ஒருவருக்கு சொல்லுகிற தில்லை என்று
உத்தமர்கள்" மூவரும் உறுதியாய்ப் பேசி
கத்தி போட்டு சத்தியஞ் செய்த இவர்கள்
கனமாக மூவரும் அரண்மனை போய்ச் சேர்ந்தார் ராசபர மேஸ்வரி மீனாள் பார்பாரப் பெண்போல மீனாள்
லோக நாயகியும் கானனானுக்கு மோசம் வந்ததென்று பாதகன் தலைமாட்டில் வந்து நின்றுகொண்டு
உன்னுடைய உப்பு தின்று போட்டு கானு உந்தனுக்கு ரண்டகம் நினைந்திட்டாரப்பா
இனிமேலே மதுரையி லிருந்தால் நீயும் இறந்து போவாயடா கான்சாயபு துரையே
மலையாளம் போய்ச் சேரு கானு என்று மதுராபுரி மீனாளுஞ் சொல்லினா ளப்போ
பார்ப்பாரப் பேய் வந்து லவுண்டி நம்மைக் கட்டியே மிரட்டுதென்று கான்சாயபு துரையும்
திடீரென்று முழித்தப்போ பார்த்து கானு:
சேதிகளை எவரோடுஞ் சொல்லம லிருந்தான்
கான் சூழ்ச்சியில் அகப்படுதல்
கானனும் சொந்த பட்டாளத்தை அப்போ
கணமாகக் கோட்டையில் பாராவும் வைத்து சந்தோஷத் துடனிருக்கும் போது சீனி
தைரிய மாகவே யோசனைகள் செய்து நூல்கயி றேழு கயி றெடுத்து அப்போ நொடிக்குள்ளே மூன்று பேரு மொன்றாகக் கூடி ஆலோசனை யுறுதியாய்ப் பேசி இவர்கள் அரண்மனை வாசலுக்கு வரும் வேளை தனிலே அடப்பக்கார படே சாயபு கண்டு அப்போ அதட்டியே நிறுத்தி விட்டுத் தலைவாசல் தனிலே ஏதடா சீனிச் சிறர்வே இப்போ
இவ்விடத்தில் மூன்று பேரும் வந்தவகை யேது உத்தர மில்லாமல் நீங்கள் இப்போ
உள்ளே வரவேண்டிய தென்ன வென்று கேட்டு கான்சாயபு துரை யிடத்தில் வந்து இப்போ
கர்த்தனே சீனிச்சிராவி ரண்டுபேரைக் கூட்டி
96. எள்ளல் பொருள்