மாலையின் அக்கிரமம் 17 போலவே வருகிருயென்று எல்லோரும் கினைக்கும்படி என்னவோ செய்து ஏமாற்றிக் கடும் பகலிலேயே வந்துவிடுகிருய். உன்னேக் கேட்பவர் ஆர் வளைந்து செல்லும் கழியில் உள்ள கெய்தல் மலர்கள் குவியும் படி, காலேயிலே நீ வந்தாலும் உன்னே மாற்றுபவரோ இங்கே இல்லை; நீ வைத்ததுதான் சட்டம்' என்று அவள் குமுறுகிருள். அவள் நோய் அவளுக்கல்லவா தெரியும் ? தலைவி கூற்று கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன் குறும்பொறை நாடன் நல்வயல் ஊரன் தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற் கடும்பகல் வருதி கையறு மாலை, - கொடுங்கழி நெய்தலும் கூம்பக் காலை வரினும் களஞ்ரோ இலரே. -ஐங்குறுநூறு - அம்மூவனர் பாட்டு. (கணம் - தொகுதி. கான்-காடு. கெழு - பொருந்திய, குறும்பொறை நாடன் - முல்லை கிலத்தலேவனது பெயர். ஊரன் - மருதநிலத் தலைவன். சேர்ப்பன் - நெய்தல்கிலத் தலைவன் ; சேர்ப்பு-கடற்றுறை. பிரிக்தென-பிரிய. பண்டை யின் - முன்போலத் தோற்றும்படி வருதி-வருகிருய். கையறு - செயலறுதற்குக் காரணமான. கொடுங்கழி - வளைந்த உப்பங்கழி. கூம்ப-குவிய. களேஞர்-விலக்குபவர்.)