மாருேக்கத்துக் காமக்கணி கப்பாலத்தனர் 55
உடல் உழைப்பின் பயனே உயர்த்திப் பாடிப் பாராட் டிய புலவர், படை மறவரால் பாழாகும் பேரூர்களின் பாழ் பட்ட கிலேயினேப் பார்த்துப்பார்த்து மனம் பதைக்கின்றார். படைமறவர் பார்வையுட் படாமுன், மக்கள் வளம்கொழிக் கவும், ஆனிரைகள் பால் சயன் தருதலால் பல்வளம் செழிக்கவும் விளங்கிய அவ்வூரில், ஆண்டில் முதிர்ந்து கரைத்த தலையினராய முதியோர் தாம் மேற்கொள்ளலாம் பணியேதும் இலராய், ஊர் மன்றத்தேயுள்ள பொதியிலில், நடுங்கும் தம் தலேகவிழ்ந்து அமர்ந்து சூதாடி மகிழ்ந் திருப்பர். செல்வம் செழித்து விளங்கியதால் கவலையற்ற மக்களைக் கொண்டிருந்த இப்பேரூரில் பகைவீரரும், படை மறவரும் பலகாலும் புகுந்து புகுந்து அழித்து, ஆனிரை முதலாம் அவர் பொருள்களே யெல்லாம் கொள்ளே கொள்ளத் தொடங்கினமையால், மக்கள் ஆண்டு வாழவும்: அஞ்சித் தாம் வேண்டும் வேற்றுார்க்குப் போய்விட்டன. ாாகவே மக்கள் கூடிமகிழும் மன்றம் பாழுற்றது; முதி யோர் இருந்து ஆடிமகிழ்ந்த பொதியில் கறையான் அரிக்க அழகுகெட்டது. இக்கொடுங் காட்சியினைக் கண்டு கண்டு கண்ணிர் விடுகிருர் புலவர் :
"வீங்குசிலே மறவர்,
பல்லும் புக்குப் பயன்கிரை கவரக் கொழுங்குடி போகிய பெரும்பாம் மன்றத்து கரைமூ தாளர் அதிர்தலை இறக்கிக் கவைமனத் திருத்தும் வல்லுவனப் பழிய வரிகிறச் சிதலை அரித்தலின் புல்லென்று பெருகலம் சிதைந்த பேஎம்முதிர் பொதியில் இன்ன ஒருசிறை.' . . . . . . . .
(அகம்: உளன)