Ž. Ž. R. தாகை நாட்டில் தாற்றிருபது தாட்கள் பேசிய பின் பிரயானத் திட்டம் உருவாகியது. அடுத்து பபளத்திற்குத் தேவையன சான்றுகளைத் (Records) தயா ரிப்பதில் ஈடுபட்டேன். புறப்பாடு வெளி நாட்டுப் பிரயாணம் இனிது நிறைவுறும் வண் ணம் தேளுர் பூஞ்சோலைத் திருவேங்கடத்தில் உறை யும் மல்லார்தோள் வடவேங்கடவனை'யும், செந்தில்வாழ் முருகன்யும் கண்டு வணங்கி, பின்னர் எனது தந்தை, பெரிய தந்தை இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, எனது பேராசிரியர்கள் அ.மு. பரமசிவானந்தம், டாக்டர் மு. வரத ராசளுர், டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் முதலி யோரின் ஆசியினைப் பெற்று 20.1.65 அன்று சென்னை பினின்றும் மாலை 4 மணி அளவில் விமானம் மூலம் எனது பயணத்தைத் தொடங்கினேன். தந்தை, பெரிய தந்தை, திருமதி மெக்கேப், அவர்களது அன்னை, பேராசிரியர்கள் அ. மு. பரமசிவானந்தம், டாக்டர். அ. சிதம்பரநாதன் செட்டியார், குடும்பத்தினர், ஏனைய உறவினர்கள், நண்பர் கள் உடன் வந்து வாழ்த்தி வழியனுப்பினர். விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் பிரயாணத்தையே நிறுத்திவிடலாமா என்ற எண்ணம் ஒரு கணம் மனதிலே தோன்றி மறைந்தது. குடும்ப பாசம் என்பது எவ்வளவு வலுவானது என்பதை இதுபோன்ற சமயங்களில்தான் உணர முடிகிறது. பின்னர் ஒருவாறு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு விமானத்தி னுள் சென்று அமர்ந்தேன். எனினும், இனந்தெரியாத பயம் மனத்திலிருந்து கொண்டேயிருந்தது. எனவே, பம்பாய் செல்லும் வரையில் பேரச்சம் உள்ளத்தை வாட் டிப் பிழிந்தது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தி விருந்து விமானம் புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் ஓடி, பிறகு திடீரென உயரக் கிளம்பி ஆகாயத்தில் பறக்கத் தொடங்கியதும் எங்களுக்குச் சுவையான சிற்றுண்டி வழங் கப்பட்டது. அந்தச் சிற்றுண்டியை நாங்கள் உண்டு முடித்த