பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

102 புதிய காக்கா குருவிக்குத் தெரியுமா? ரகசியம். அப்படி எல்லாம் பாடுபடறேன்; ஏழை மேலே இரக்கம் காட்டாம இருந்தா நல்லதா சொல்லுங்க” என்று கெஞ்சிக் கூத்தாடிப் பேசி, தாக சாந்திக்கு உதவி கேட்டுப் பெரும் அளவுக்கு வேலப்பது டைய நிலைமை ஒரு ஆறே மாதத்தில் உயர்ந்து விட்டது. மாறிவிட்டது... ஆசாமியின் நடை உடை பாவனையே தொழில் அவனைப் புது ஆளாக்கி விட்டது. சுருள் மீசை - சந்தனப் பொட்டு-விரலிலே சிகரெட் டின் - இப்படி, கோலமே மாறிவிட்டது. வேலப்பன், கள்ளச்சாராய விற் பனையில் கைதேர்ந்தவனாகிவிட்டான். அவன் 'காச்சினது' சாப்பிட மாட்டான். நாற்பதோ,ஐம்பதோ, வீசி எறிந்தால், 'அசல்' கிடைக்கும். விஸ்கியோ, பிராந் தியோ, அதைத்தான் சாப்பிடுவான். மட்டம், இந்தப் பசங் களுக்கு; அதைச்சாப்பிட்டுவிட்டு குடல் வெந்து சிலது சாகும்; குளறிக் கூத்தாடி சிலது போலீசிலே சிக்கிக் கொள்ளும்-- வேலப்பனுக்குப் புதிய அந்தஸ்தே ஏற்பட்டுவிட்டது, அந்த உலகத்தில். மட்டும் முதல் 'சில்க்' சட்டை தைத்துப் போட்டுக் கொண்ட போது, அவனுக்கு செல்லி மீது நினைவு சென்றது. அவள் கன்னமும் இந்தச் சட்டையும் உராய்ந்தால் எப்படியிருக்கும் ஆனந்தம் என்று எண்ணிப் பார்த்தான்.விதவிதமான பட்டுச் சேலைகள், புது தினுசு ஜாக்கெட்டுகள், பவுன் நகைகள்— இவைகளை எல்லாம் வாங்கிக் கொடுத்து, செல்லி இவை களால் தன்னை அலங்கரித்துக் கொண்டு, எதிரே நின்று கொண்டு சிரித்துப் பேசுவாள்—கனவில்! அவனுக்கு பணம் சேரச்சேர, செல்லி என்ன நினைப் பாள்? இது ஒரு பொழைப்பா என்று கேவலமாகப் பேசு வாளோ! எந்தச் சமயத்திலே போலீசில் சிக்கிக்கொண்டு கம்பி எண்ணவேண்டி வருமோ, அடிமடியிலே நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழ்வது ஒரு வாழ்வா என்று வெறுப் போடு கேட்பாளோ என்றெல்லாம் எண்ணம் சென்றது. மொத்தமாக ஒரு ஆயிரம் சேர்ந்ததும், போதும் இத்தோடு கிராமம் போய்விடுவோம்; கலியாணம் செய்து கொண்டு