பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொலிவு 115 "எண்ட வடிவேல்! பொதி பொதியாகக் கொட்டிக் காட்டணும் - கருக்கமாகச் சொல்ல வேணும்னா கிராமத் துக் கட்டழகியைக் கலியாணம் செய்து கொள்ளவும் நான்' தயார்னு சொல்லேன்' அவனது நண்பர்கள் கேலி பேசுவர். "தயார்...! என்று தயாவிஷயமாசப் பேசுவானேன். கிராமத்துப் பெண்ணைத்தான் கலியாணம் செய்து கொள் ளப் போகிறேன். இது உறுதி!" என்று திட்டவட்டமாகக் கூறிவந்தான். "சொன்னபடியே செய்தே காட்டிவிட்டானே! செல்லி அழகான பெண்தான். ஆனா அசல் பட்டிக்காடு! முகத்தி லேயே அந்த முத்திரை விழுந்திருக்கு என்று கலியாணத் துக்குப் பிறகு கூறினர். பெருமையுடன் தன் நண்பர்களிடம், "டேய், பார்த்தாயா! சொன்னபடி நடத்திக் காட்டினேன்” என்று பேசுவான். "என்னமோடாப்பா, நீ சந்தோஷமாக இருந்தாப் போதும்" என்று கூறினர். செல்லியைப் பொறுத்தமட்டில், பணிவிடை செய்வ தன் மூலம் வடிவேலனை மகிழ்விக்க வேண்டும் என்பதிலே கொண்டிருந்த அக்கரையே இருந்தது. வேலப்பனிடம் 'பிரேமை' இனி மீண்டும் எழாது-வேறோர் திசையில் செல்லாது- -ஆனால் வடிவேலனிடம் நல்ல மதிப்பு இருந் தது சில வேளைகளிலே பரிதாபமாகக்கூட இருந்தது. நாமோ பட்டிக்காடு-இவரோ படித்தவர், பட்டணத்துக் காரர்.- பணக்காரர். இவர் ஏன், இந்தப் பட்டணத்திலே எத்தனையோ பேர் ராணிபோல் இருந்தும், என்னைத் தேடிக் கண்டுபிடித்தார்? என் தரித்திரத்தைக் கண்டு பாசம் பிறக் குமா? வேடிக்கையாக அல்லவா இருக்கிறது! இங்கே உள்ள வர்களின் நடை உடை பாவனைகளிலே உள்ள நாகரிகத்துக் கும், என் போக்குக்கும் ஏணி வைத்தாலும் எட்டாதே! எதைத் தொட்டாலும். சோப்புப் போட்டுக் கை கழுவி. உடனே ஈரம் போகத் துணியால் துடைத்துக் கொள்கிறார் கள். எத்தனையோ தடவை, கீழே எண்ணெய் கொட்டி விட்டால் எடுத்துத் தலையில் தடவிக்கொள்ளுவேன்- பிறகு முந்தானையில் துடைத்துக் கொள்ளுவேன்--நான் இங்கே,