பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

லட்சாதிபதி 151 ஆனால் நாளடைவில் அவருக்கே திகைப்பு தரும் வகையில் வியாபாரம் தழைத்தது. அவ்வப்போது சிலசில சரக்குகளுக்கு ஏற்பட்ட கிராக்கி அவருக்குப் பெரிய சேர்ந்தது. ஒரு ரூபாய்க்கு உதவியாக வந்து வாங்கிய சாமான், நாலு சாமான் கிடைக்காதபோது ரூபாய்க்குக்கூட விற்றது. அளவும் நிறையும்கூட செட்டியார் விருப்பப்படிதான். வியாபாரம் தழைத்ததைப் போலவே அவருடைய உடலும் தழைத்தது—பருத்தது என்பது பொருத்தமான தாராளமாகக் சொல். செட்டி என்று சொன்னவர்கள் செட்டியார் என்று சொல்லத் தலைப்பட்டார்கள். செட்டியாரும் அழகுக்காக நெற்றி நடுவில் மட்டும் மெல்லிய சிவப்புக்கோடாக இட்டுக்கொண்டு இருந்த ஒற்றை நாமத்தை இருபக்கமும் வெள்ளையைத் குழைத்துத் தடவி தம்முடைய பக்தியை கடையில் அலங்காரமாக வெளிப்படுத்திக் கொண்டார். இருக்கட்டும் என்றுதான் முனையிலே முடிச்சோடு கூடிய ஒரு கயிற்றைத் தொங்கவிட்டிருந்தார். இப்போதெல்லாம் அதைப் பலமாகப் பிடித்துக் கொள்ளாவிட்டால் யாரால் எழுந்திருக்க முடிவது இல்லை. செட்டி இத்தனை மாற்றமும் செட்டியாரின் திறமையால் வந்த வையே. இருப்பதை இல்லை என்று சொல்லியும், இல்லாததை எங்காவது வாங்கிக் கெ டுத்தும், இப்படியாகச் செய்த வியா பாரத்தில் விளைந்த மாறுதல் இவ்வளவும். அவருக்கு உதவி யாக அவ்வப்பொழுது சில பொருள்கள் ‘கட்டுப்பாடு' ஆகும். முன் நாள் செட்டியார் கடையில் அது எத்தனை மூட்டை இருந்தாலும் மறுநாள் இல்லாது போகும். அப்புறம் கொஞ் சுங் கொஞ்சமாக வெளிவரும், தக்க மரியாதை உடன்தான்! கொஞ்ச நாட்களாகச் சர்க்கரை அப்படித்தான்,விசேஷ மான மரியாதை-கௌரவங்களுடன் மாலை 6 மணிக்கு மேல் வெளிவந்துகொண்டிருக்கிறது. மிகுந்த சிரமத்தின் பேரில், சாதிக்க முடிந் மிகவும் வேண்டியவர்கள்தான் அதையும் தது. இத்தனைக்கும் அந்த ஊரில் சர்க்கரைக்குக் 'கார்டு' சர்க்கரை போதாதவர்கள் என்ன செய்வார்கள்? செட்டியார் இருக்கப் பயம் ஏன்?