பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொலிவு 95 கிடைக்காது. இங்கே பாரு, எட்டணா?" என்று சிறுவன் பெருமையாகச் சொன்னான். ஆமாம்டா, இனி இப்படித்தான், மோட்டாரு கழுவி நீ புழைக்க வேண்டியதுதான். நானும் ஏதாவது ரயில் துடை கப் போக வேண்டியதுதான். வேறே புழைப்பு! அப்படியாப் பட்ட குச்சிக்கிழங்கு போட்டே கட்டிவராமே கஷ்டம் வந் துடுச்சின்னா, இனி இங்கே எதை நம்பிகிட்டுக் கிடக்கறது என்றான் வேலப்பன். மரத்தடியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தவன் விழித்துக் கொண்டான். 'டிரைவரு! உனக்கு என்னா சம்பளம் றாங்க? என்று கேட்டான் வேலப்பன். கொடுக்க "மோட்டார் கார் ஓட்டுபவனுக்கு நாற்பது, ஐம்பது ரூபா சம்பளம் கிடைக்கும்.” என்றான், அவன். 'பாரேண்டா, இவரு பேசற தினுசை? உனக்கு உங்க கொடுக்கறார் சொல்லய் எஜமான் எம்மாஞ் சம்பளம் யான்னா..." ‘“அதுவா? எனக்கு எஜமான் இல்லையே; நான் டிரைவர் இல்லே... என்னோட 'கார்' தான் இது...'என்றான் அவன். “என்னது? விளையாடறிங்களா.... இல்லேப்பா விளையாட்டு என்ன இதிலே? கார் என்னுடையதுதான்..." அப்படியா...நானு.. நீங்க...மரத்தடியிலே துத் தூங்கிகிட்டு இருக்கவே, டிரைவருன்னு... படுத் "மரத்தடி! மாந்தோப்பு! மணம்! ஏர் உழவர் பாடல்! ஏத்தப்பாட்டு! நாத்து நடும் பெண்கள்! எங்கும் பசுமை! எங்கும் புதுமணம்!'என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டே அந்த ஆசாமி, சுற்றிலும இருந்த காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். வேலப்பனுக்குச் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. வாழ்க்கை குன்றுகிறது; இனிக் கிரா மத்திலே இருந்துகொண்டு காலந்தள்ளுவது முடியாது,