பாரதி
Jump to navigation
Jump to search
பாரதி[தொகு]
கவிமணியின் கவிமலர்கள்[தொகு]
- பார்க்க 23. பாவின்
- 1. அமரகவி
- 1. ஊரறிய நாடறிய உண்மை யெல்லாம்
- ஒருவரையும் அஞ்சாமல் எடுத்துரைத்தோன்
- ஆரமுதம் அனையகவி பாடித் தந்தோன்
- அமரகவி யென்றெவரும் புகழப் பெற்றோன்,
- சீருயரும் தமிழ்மக்கள் செய்த வத்தால்
- தென்னாடு சிறக்க வந்த சுப்ரமண்ய
- பாரதியார் பெயர்போற்றி ஏத்து வோமே
- பாமாலை புனைந்தவற்குச் சாத்து வோமே.
- 2. பாரதியும் பட்டிக்காட்டானும்
(பட்டிக்காட்டான் பட்டணம் போனான். பாரதி பாடலைப் பண்ணோடு கேட்டான்; அதில் அவன்மனம் ஈடுபட்டது. சில தினங்களில் ஊருக்குத் திரும்பினான். அங்கே தன் நண்பர்களுக்கு அப்பாடல்களின் அருமை பெருமைகளை உணர்ந்த மட்டில் விவரித்துக் கூறினான்.)
- (வெண்பா)
- 1. உள்ளக் கருத்தை யெல்லாம் உள்ளபடி யானிந்த
- வெள்ளைக் கவியில் விளம்பினேன் - தெள்ளுதமிழ்
- வெண்பாப் புலியும் விகட கவியுமெனக்
- கண்பார்த்துக் காத்தல் கடன்.
- (வேறு)
- 2. பாட்டுக் கொருபுலவன் பாரதியடா! அவன்
- பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா!
- கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! - அந்தக்
- கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா!
- 3. சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமேயடா! - கவி
- துள்ளும் மறியைப்போலே துள்ளுமேயடா!
- கல்லும் கனிந்துகனி யாகுமேயடா! - பசுங்
- கன்றும்பால் உண்டிடாது கேட்குமேயடா!
- 4. குயிலும் கிளியும் பாட்டில் கூவுமேயடா! - மயில்
- குதித்துக் குதித்துநடம் ஆடுமேயடா!
- வெயிலும் மழையுமதில் தோன்றுமேயடா! - மலர்
- விரித்து விரித்து மணம் வீசுமேயடா!
- 5. அலைமேலே அலைவந்து மோதுமேயடா! - அலை
- அழகான முத்தையள்ளிக் கொட்டுமேயடா!
- மலைமேலே மலைவளர்ந் தோங்குமேயடா! - அதை
- வனங்கள் அடர்ந்தடர்ந்து சூழுமேயடா!
- 6. விண்ணிலொளிரு மீன்கள் மின்னுமேயடா! விண்ணில்
- விளங்கும் மதிநிலவு வீசுமேயடா!
- கண்ணுக் கினியசோலை காணுமேயடா! அதில்
- களித்திள மான்கள் விளையாடுமேயடா!
- 7. தேனும்தினையும் பாவில் உண்ணலாமடா! - மிகத்
- தித்திக்கும் முக்கனியும் உண்ணலாமடா!
- கானக்குழலிசையும் கேட்கலாமடா! - ஊடே
- களிவண்டு பாடுவதும் கேட்கலாமடா!
- 8. நாட்டு மொழியுமவன் பாட்டினிசையில் - மிக்க
- நல்ல கற்கண்டினிமை சொட்டுமேயடா!
- ஏட்டிலிம் மந்திரந்தான் கண்டவருண்டோ? - ஈதல்
- ஈசன் திருவருளென் றெண்ணுவாயடா!
- 9. உள்ளந் தெளியுமொரு பாட்டிலேயடா! - மிக்க
- ஊக்கம் பிறக்குமொரு பாட்டிலேயடா!
- கள்ளின் வெறிகொளுமோர் பாட்டிலேயடா! - ஊற்றாய்க்
- கண்ணீர் சொரிந்திடுமோர் பாட்டிலேயடா!
பாரதியும் பட்டிக்காட்டானும்[தொகு]
- (வேறு)
- 10.‘கரும்புத் தோட்டத்திலே’ -எனுங்கவி
காதைச் சுடுகுதடா!
இரும்பு நெஞ்சமுமே- நீராய்
இளகி யோடுதடா!
11.'செந்தமிழ் நாட்டின்’ - முதன்மொழி
செவியிற் சேருமுன்னே,
அந்தமில் லாமல்- உள்ளத்தில்
அமுதம் ஊறுதடா!
12. ‘பாப்பாப் பாட்டி’லே - நெஞ்சைப்
பறிகொடுத் தேனடா!
சாப்பா டேதுக்கடா!-சீனி
சர்க்கரை ஏதுக்கடா?
13. அன்னை ‘பாஞ்சாலி சபதம்’
அறைதல் கேட்டேனடா!
முன்னைக் கதையெல்லாம்- கண்ணின்
முன் நடந்ததடா!
14. ‘வந்தேமாதர’த்தைப் - பாடவே
வாய்தி றந்தவுடன்
சந்தேகமில்லை - ஒருபுதுச்
சக்தி தோன்றுதடா!
15. ‘எங்கள் நாடு’தான் -பூபாள
இசையி லேறிடுமேல்
கங்கை யாறுபோல் - உள்ளத்தில்
களிப்பொ ழுகுதடா!
16. ‘சின்னஞ் சிறுகிளி’ - கனவில்
தினமும் காணுதடா!
கன்னங் குழியவே - முத்தமும்
கனிந்த ளிக்குதடா!
17. ‘கண்ணன் காதலன்’ - எனக்கொரு
கனிய முதமடா!
விண்ண முதமுமே - அதனை
வெல்ல மாட்டாதடா!
18. ‘குயிலின் பாட்டி’லே - காதல்
கொப்புளிக்குதடா!
செயல்மறந் தேனடா - லாகிரி
சிரசிற் கொண்டதடா!
19. ‘சுதந்திரப் பாட்டில்’ - உள்ளம்
துடிதுடிக் குதடா!
பதமெ ழும்புதடா! கையும்
படபடக் குதடா!
20. ‘தொண்டு செய்யுமடிமை’ - என்னும்
சுடுசரம் ஓடி,
மண்டையைத் தாக்குதடா! நெஞ்சம்
மடியப் பாயுதடா!
21. பெண்டு பிள்ளைகளின் - பெருமை
பெரிதறிந் தேனடா!
சண்டைகள் செய்ததெல்லாம் - எண்ணித்
தலைகவிழ்ந் தேனடா!
22. ஏழைதுய ரெல்லாம் - அவனும்
எடுத்தடுக் கையிலே,
மூளை கலங்குதடா! - விம்மி
மூச்சும் முட்டுதடா!23. பாவின் நயமெல்லாம்
- யானும்
பகர வல்லேனோ?
ஆவின் பாற்சுவையை - நாழி
அளந்து காட்டிடுமோ?
3. பாரதி மண்டபம்
- (வெண்பா)
- 1. தேவருமே இங்குவந்து செந்தமிழைக் கற்றினிய
- பாவலராய் வாழமனம் பற்றுவரே - பூவுலகில்
- வானுயரும் பாரதியார் மண்டபத்தை எட்டப்பன்
- மாநகரில் கண்டு மகிழ்ந்து.
- (வேறு)
4. திறப்பு விழா
- 2. பாரதத்தாய் செய்ததவப் பயனாய் வந்த
- பாவலன் சுப்பிரமணிய பாரதிக்குச்
- சீருயரும் எட்டய்ய புரத்திற் கண்ட
- திருக்கயிலை யனையமணி மண்டபத்தைப்
- பேருவகை தருசர்வ ஜித்தில் கன்னி
- பிறந்தஇரு பானேழில் திறந்து வைத்தான்,
- தாரணியில் வங்கவள நாட்டை யாளும்
- சக்ரவர்த்தி ராஜகோ பாலமாலே.