இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22
நேர்மையால், நீதிக் கொள்கை
- நிறைந்திடும் நெஞ்சு கொண்ட
நீர்மையால், நிமிர்ந்த நோக்கம்
- நிரம்பிய நிகரில் லானைக்
கூர்மதி, கொடுமை கொன்று
- குவலயந் தழுவுங் கேண்மை,
பார்முழு தேற்கும் பண்பால்
- பகையிலாப் பெருமான் தன்னை
ஈடிலாக் குடும்ப பாசம்
- எழிலுடன் இசையும் மேன்மை,
கேடிலாத் தூய திட்டம்
- கீழோரை உயர்த்து தற்கு,
நாடியே மக்கள் ஈண்ட
- நல்கிய சொல்வல் லானைப்
பாடியே புகழை ஈட்டப்
- பணிவுடன் வணங்கு கின்றேன்!