பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணிந்துரை
பேராசிரியர் மா.நன்னன்
புலவர், எம்.ஏ., பிஎச்.டி.


புலவர் என்.வி. கலைமணி யவர்கள் தாம் தொகுத்து வெளி யிடும் அய்யன் திருவள்ளுவர் என்னும் பெயரிய நூலொன் றுக்கு அணிந்துரை வேண்டினார். கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்பிருந்தே அவரை யாமறிவோம். அவர் எரியீட்டி’யாயும், ‘சவுக்கடி'யாயும், பலரையும் மருட்டியும், அச்சுருத்தியும் துலங்கி வாழ்ந்த காலத்திலேயே எம்ம்ால் அறிந்து காமுறப் பட்டவர். அவரைப் பற்றி பலர் பல வகையில்,மதிப்பிட்ட காலமது.

அவர் தமிழ் எழுத்துலகில் மறகத்தக்கவரல்லர். அவர் நிலைப்பதற்கு இந் நூலும் உதவும். ஆயினும் அவர் நன்கு நிலை கொள்வதற்குத் தம் எழுதுகோலை மீண்டும் தேடி எடுத்து ஆள வேண்டும் என்பது எமது விருப்பம் மட்டுமன்று, வேண்டு கோளும் ஆகும். தூண்டுகோலுமாக யாம் பயன்பட்டாலும் சரியே.

இந்நூல் பகுதிகளுள் தரப்பட்டுள்ளவை பல என் பாராட்டுக் குரியவையாகின்றன. இனிப்புருண்டையில் முந்திரிப்பருப்பும், பொடி முந்திரி வற்றலும், தலைகாட்டி நம்மை ஈர்ப்பன போல் இவை அமைந்துள்ளன. சுருங்கக் கூறுவதாயின் தக்கவற்றைத் தக்கவற்றிலிருந்து தக்கவாறு தேர்ந்தெடுத்துத் தக்காங்கமைத்துள்ளார் கலைமணி என்னலாம்.

பற்பல இடங்களிலும் புலவர் கலைமணி அவர்கள் தமக்கு மட்டுமே உரிய நடையில் எழுதியுள்ளார். அத் தனித் தன்மை மாறாமல் அமைந்திருப்பதைக் காண்கிறோம். 171 ஆம் பக்கத்திலுள்ளவை போன்றன செய்யுட் டிறம் காட்டுகின்றன. ஓசை நயம் பொதுளிய பாத்திறம் வாய்ந்தவர் இவர் என்பதை அப்பாக்களில் கண்டு மகிழ்ந்து எம் நண்பர் கலைமணியைப் பாராட்டுகிறோம். இம்முயற்சியை நிறுத்திட வேண்டா எனவும் வேண்டுகிறோம்.

பக்கம் 130 முதலியவை இந் நூலில் காணப்படும் பொதுப்

7