இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆறுமுகமான பொருள்
7
வேலுக்குறிச்சி என்ற சிறிய குன்றின் மீது வேட்டுவனாய் நிற்பதைக் கண்டுபிடித்தேன். அவனைக் கண்ட மகிழ்ச்சியிலே,
வள்ளிக் கிசைந்த
மணவாளன் வேட்டுவனாய்
அள்ளிக் கொளும் பேர்
அழகுடனே துள்ளுகின்ற
கோழியினைக் கையிடுக்கி
கொள்ளிமலைச் சாரலிலே
வாழுகின்றான் சென்றே
வணங்கு
என்று உங்களை எல்லாம் அந்த ஆறுமுகமான பொருளிடத்து ஆற்றுப்படுத்திவிட்டு நான் நின்று கொள்கிறேன்.