உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரையைத் தேடிக் காகம் ஒன்று
சுற்றி வந்தது.
எங்கள் வீட்டுக் கூரை மீது
வந்த மர்ந்தது.

தரையில் கொட்டிக் கிடந்த நல்ல
தானியங்களைத்
தடையில் லாமல் புறாக்கள் கூடி
மேயக் கண்டது.

கள்ளத் தனமாய்ப் புறாக்க ளோடு
சேர்ந்து நாமுமே.
களித்து இரையைத் தின்ன வேண்டும்.
எனநி னைத்தது;


34