இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழ்ப் பற்று
❖
தேவ பாஷையில்
தேர்ச்சி மிக்க
சாஸ்திரி ஒருவர்
சபையில் சொன்னார்;
“ஜாதி வேண்டும்”
“ஜாதி வேண்டும்:”
உடனே சீறி
ஒருதமிழ் மறவர்
ஓங்கிக்கத்தினார்;
"ஓய் ஓய், இனிநீர்
ஜாதி வேண்டும்
என்றால் பொறுமையாய்
இருக்க முடியாது என்னால்
சரியாய்ச்
சாதி வேண்டும்
என்றே சாற்றும். ”