இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உறுமீன் வருமளவும்...
❖
வீர வலசை
விவசாயி போல
மாறு வேடத்தில்
மந்திரி வந்தார்......
ஆட்சித் தலைவர்
அலுவலகத்தில்
உட்கார்ந்திருந்தவோர்
ஊழியரிடம்போய்
விவரம் ஏதோ
வேண்டும் என்றார்;
இரண்டு தாளை
எடுத்து நீட்டினார்.
மாட்டேன் என்றே
மறுத்தார் ஊழியர்.
மந்திரி மகிழ்ந்தார்;
தம்துறை ஊழியர்
நேர்மையை நினைத்து
நெஞ்சங் குளிர்ந்து
சென்றார் வெளியே...
40