உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடகத் துறையில் எனக்கு நல்வழி காட்டியவர்: கண்களை இமை காப்பது போல் காத்து எனக்கு அறிவூட்டியவர், அன்பு காட்டி அரவணைத்து என் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் ஊன்றுகோலாக நின்றவர்; ஒழுக்கத்தின் உறைவிடம்; உண்மையின் இருப்பிடம், பேருள்ளம் படைத்த பெரியண்ணா திரு. டி. கே. சங்கரன் ஆவர்களின் திருவடிகளுக்கு இந்நூல் எனது இதயக் காணிக்கை.

தி. க. ஷண்முகம்