22
வேண்டும். அந்த இயக்கத்திற்கு பொதுஜன ஆதரவு கிட்டும் என்பதில் சந்தேகமில்லை. படம் பார்க்கிறவர்கள் எல்லோரும் தங்கள ரசனையை, கலையுணர்ச்சியை இன்னும் இழந்துவிடவில்லை. பகுத் தறிவைப் பறி கொடுத்து விடவில்லை. கலைக் காளான்களும்,
சுயநலமிகளும் படாடோபவிரும்பிகளும் கல்வியறிவற்றவர்களும் சேர்ந்து தமிழ்க்கலையை உருப்படவிடாமல் செய்து, தமிழ் நாட்டை அந்தகார நிலையமாக ஆக்கி வரு வதை- மக்களை மடையர்களாக்க விரும்புவதை- அனு மதிக்கக் கூடாது. சினிமாக்கலையிலே மறுமலர்ச்சி காண வேண்டும்.பொது மக்களின் எதிர்ப்புதான் முதலாளிகளின்
குருட்டுத்தனத்தை ஓட்ட முடியும்.
நல்ல படங்கள் வேண்டும் , நல்ல படங்களை உற்பத்தி
செய்யுங்கள் என்று ஒரு சிலர் பேசுவதாலோ, எழுதி விடுவதனாலோ எதுவும் விளைந்துவிடாது என்பதைக் காலம்
-ட்டி வருகிறது.படம் பார்க்கிறவர்கள்
எல்லாப் படங்களையும் பார்ப்பது
பார்த்துவிட்டு நன்றாக இல்லை... பாடாவதிப்படம் என்று ஏசி விட்டு, மறுபடியும் பாடாவதிப்படங்களைத் தேடிப் போவது என்ற வழக்கத்தை விட்டு விட்டு, பாடாவதிப் படங்களை பகிஷ்கரிக்க வேண்டும்.மக்கள்களை முட்டாள்கள் என மதித்து மடத்தன மான படம்பிடித்துத் தள்ளும் பணமூட்டை களுக்கு, அவர்கள் படங்களைப் பாராமல், பணவசூலற்றுப் போகும்படி செய்து வீணர்களுக்கு புத்தி கற்பிக்க வேண்டும். என்று மககள் அதற்கு தயாராகிறார்களோ, என்று படுபாடாவதிப் படங்கள் பம்மாத்து வேலைகள் வெற்றி