உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காணிக்கை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அவன் அவள் கற்பைக் கெடுத்தபிறகு அவள் எப்படிக் கண்ணகியாக மாறமுடியும்.

“பத்தரகாளி படம் பார்த்திருக்கிறாயா?"

"அதுதான் கண்ணகியா?"

"பழிக்கு வழி சொல்லடா என்று கேட்டாளே அவள் பத்திரகாளிதானே?"

கையில் சிலம்பு வைத்திருந்த கண்ணகி வீரப்புரட்சி செய்தாள். பாண்டியனை வீழ்த்தினாள். அதுதான் அவள் சிறப்பு.

"அப்படியானால் நான் வந்து"

"அவனைக் காப்பாற்றினீர்கள் அவ்வளவுதான்"

எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அவள் தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியைக் காட்டினாள்.

"இப்பொழுது பெண்களுக்கு இது அவசியமாகிறது" என்று சொன்னாள்.

"நாட்டில் பாதுகாப்பு இல்லை அல்லவா."

"இருக்கிறது. அது நேரம் பொறுத்து வரும். விசாரணை நடக்கும்; அவ்வளவுதான்”

அந்தச் சொல் எனக்குப் பிடிக்கவில்லை. கேட்டுக் கேட்டுச் சலித்துவிட்டது.

"உனக்கு எப்படி இந்தத் தைரியம்?"

"நான் N. C. C-இல் சேர்ந்து இருக்கிறேன்"

"அப்படியா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/25&oldid=1321253" இலிருந்து மீள்விக்கப்பட்டது